async='async' nonce='t6bwn6hUjD3gY64Df1e_cQ' src='https://fundingchoicesmessages.google.com/i/pub-6607909196454087?ers=1'/> ca-app-pub-5474065999861838~2351779441 ca-app-pub-5474065999861838/5543358688 fapytamilnetwork.blogspot.com: தண்ணீர் பூரி:

தண்ணீர் பூரி:

 தண்ணீரில் பூரி சுடத் தேவையான பொருட்கள்:


கோதுமை மாவு – 1 கப்
எண்ணெய் – 1 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு

தண்ணீரில் பூரி செய்முறை:

முதலில் பூரிக்கு எப்போதும் மாவு பிசைவது போல் கோதுமை மாவு மற்றும் உப்பு சேர்த்து பிசைந்துகொள்ளவும். பிறகு, அதனுடன் சிறிதளவு எண்ணெய் சேர்த்தும் பிசைந்து கொள்ளவும்.

பின்னர் மாவை உருண்டை பிடித்து வட்டமாக பூரி தேய்த்துக்கொள்ளவும்

இப்போது பூரி சுட வைத்துள்ள பாத்திரம் அல்லது கடாயில் பூரிக்கு எண்ணெய் ஊற்றுவதுபோல் தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும்.

தண்ணீர் நன்றாக கொதித்து வந்ததும், பூரி மாவை அதில் போட்டுக்கொள்ளவும்.

அவை ஒருபுறம் வெந்ததும் மேலே எழும்பி வரும். பின்னர் அடுத்த பக்கம் அவற்றை திருப்பிப் போட்டுக்கொள்ளவும்.

இந்த முறையில் பூரியை ஒவ்வொன்றாக சுட்டு எடுத்ததும், அவற்றை இட்லி குக்கர் வைத்து அதற்குள் தட்டு வையுங்கள். இல்லையெனில் கடாய்க்குள் தட்டு வைத்து அதில் பூரியை அடுக்கி சூடேற்றவும். பூரி புஸ் என்று பொங்கி வரும்.

அவ்வளவுதான், நீங்கள் எதிர்பார்த்த எண்ணெய் இல்லா பூரி இப்போது தயாராக இருக்கும். அவற்றை உங்களுக்கு பிடித்த குருமாவுடன் சேர்த்து ருசிக்கலாம்.

No comments:

Post a Comment

Thank you for reading our articles follow my blog