Idly : இட்லியை பஞ்சு போல உங்க வீட்டில் செய்ய இந்த 5 டிப்ஸ்களை ஃபாலோ செய்தால் போதும். அதை எப்படி செய்வது? என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.
1. முதலில் மூன்றறை ஆழாக்கு இட்லி அரிசி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு உளுந்து ஒரு ஆழாக்கு இருந்தால் போதுமானது. அதாவது ஒரு பங்கு உளுந்துக்கு, மூன்றரை பங்கு இட்லி அரிசி எடுத்து இரண்டையும் சுத்தமான தண்ணீர் ஊற்றி தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
2. ஊற வைத்த தண்ணீரை பயன்படுத்தி தான் மாவு அரைத்து முடிக்க வேண்டும். உளுந்து அரைக்க குறைந்த பட்சம் 30 நிமிடம் வரை செலவிடுங்கள். உளுந்து எந்த அளவிற்கு நைசாக அரைக்கிறதோ, அந்த அளவிற்கு இட்லி சாஃப்டாக வரும். 30 நிமிடம் இடையிடையே தண்ணீர் விட்டு நன்கு பொங்க பொங்க ஆட்டி எடுக்க வேண்டும்.
3. பிறகு அதை எடுத்து விட்டு அரிசியை போட்டு 15 நிமிடம் வரை அரைத்தால் போதுமானது. அரிசி கொரகொரவென்று இருக்க வேண்டும். மிகவும் நைசாக அரைத்து விட்டால் இட்லி அவ்வளவு நன்றாக வராது. அரிசிக்கு முதலிலேயே தண்ணீரை ஓரளவிற்கு தாராளமாக ஊற்றலாம். ஆனால் உளுந்திற்கு முதலில் தண்ணீரை அதிகமாக ஊற்றி விடக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
4. அரிசி அரைக்கும் பொழுதே கல் உப்பு சேர்த்து அரைத்து விட வேண்டும். இட்லி நன்றாக வர கல் உப்பு தான் சேர்க்க வேண்டும்.
5. பின் இரண்டையும் ஒன்றாக கலந்து எட்டு மணி நேரம் அப்படியே புளிக்க விடுங்கள். அதன் பிறகு நீங்கள் இட்லி ஊற்றும் பொழுது நன்றாக கலந்து விட்டு அப்படியே வைத்துவிட வேண்டும். அதன் பிறகு எப்போதும் நீங்கள் மாவை கிளறக் கூடாது. பிரிட்ஜில் இருந்து எடுத்து அரை மணி நேரம் கழித்து இட்லி ஊற்றினால் நல்லது. உடனே ஊற்றினால் அவ்வளவாக சாஃப்ட் இருக்காது. உங்களுக்கு தேவையான மாவை மட்டும் பிரிட்ஜில் இருந்து எடுத்து உபயோகப்படுத்துங்கள்.
2. இதில் சொல்லப்பட்ட டிப்ஸை அப்படியே செய்தால் நிச்சயம் சாஃப்பான இட்லி வந்துவிடும்.
No comments:
Post a Comment
Thank you for reading our articles follow my blog