பலதானிய அல்லது மல்டிகிரேன் இட்லி செய்யத் தேவையான பொருட்கள்:
1/2 கப் ராகி மாவு
1/2 கப் பஜ்ரா மாவு
1/2 கப் ஜோவர் மாவு
1/3 கப் முழு கோதுமை மாவு
உளுத்தம் பருப்பு 2 தேக்கரண்டி
வெந்தயம் 1 தேக்கரண்டி உப்பு
எண்ணெய்
பலதானிய அல்லது மல்டிகிரேன் இட்லி செய்வது எப்படி?
முதலில் உளுத்தம்பருப்பு மற்றும் வெந்தய விதைகளை ஒரு பாத்திரத்தில் போதுமான அளவு தண்ணீருடன் சுமார் இரண்டு மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும்.
பிறகு மாவை ஒரு அகலாமான கிண்ணத்தில் மாற்றி, அதில் உப்பு சேர்த்து அனைத்து மாவுகளையும் சேர்க்கவும். இதனுடன் ஒரு கப் தண்ணீர் கலந்து நன்றாக கிளறவும். பின்னர் ஒரே இரவில் புளிக்க மூடி வைக்கவும்.
மாவு புளிக்கவைத்த பிறகு, மாவை மீண்டும் கலக்கவும்.
இப்போது இட்லி அச்சுகளில் முடிந்தவரை சிறிது எண்ணெய் அல்லது நெய் தடவிய இட்லி மாவு ஊற்றவும்.
அவற்றை சுமார் 15 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும். மீதமுள்ள மாவையும் இதுபோல் செய்துகொள்ளவும்.
பிறகு சாம்பாருடன் சூடாக பரிமாறி ருசிக்கவும்.
கார இட்லி சிம்பிள் செய்முறை:
ஒரு கடாயில் சிறிது எண்ணெயை சூடாக்கி, சிறிது கறிவேப்பிலை மற்றும் கடுகு சேர்க்கவும். அவை வெடிக்கும் வரை வதக்கவும். பிறகு சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து, ஒரு முறை கிளறி, வேகவைத்த இட்லியை அதில் சேர்த்து தாளிக்கவும். இப்போது சூடான மற்றும் காரமான இட்லி தயாராக இருக்கும்.
இட்லி உப்மா:
இந்த இட்லி உப்மா தயார் செய்ய, முதலில் இட்லியை உதிர்த்துக்கொள்ளவும்.
பிறகு, ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்துக்கொள்ளவும். இவற்றுடன் வெங்காயம் மற்றும் மஞ்சள் தூள் வேண்டும் என்றாலும் சேர்த்து கொள்ளலாம்.
இவையனைத்தையும் நன்றாக வதக்கி பின்னர், முன்னர் உதிர்த்த இட்லிகளை இவற்றுன் சேர்த்து கிளறிக் கொண்டால், சுவையான இட்லி உப்மா தயார்.
இந்த இட்லி வகைகளை நீங்களும் ஒரு முறை முயற்சிக்கலாம் மக்களே!!!
No comments:
Post a Comment
Thank you for reading our articles follow my blog