async='async' nonce='t6bwn6hUjD3gY64Df1e_cQ' src='https://fundingchoicesmessages.google.com/i/pub-6607909196454087?ers=1'/> ca-app-pub-5474065999861838~2351779441 ca-app-pub-5474065999861838/5543358688 fapytamilnetwork.blogspot.com: March 2022

Idly, dosai, chappathi side dish tomato dal

 தக்காளி தால் செய்யத் தேவையான பொருட்கள் :

மசூர் தால் – 1 கப்
தக்காளி – 4
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 5 பல்
பச்சை மிளகாய் – 2
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
கடுகு, சீரகம் – தலா 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

தக்காளி தால்  செய்முறை:

முதலில் பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து, மலர வேக வைக்கவும்

பிறகு, தக்காளியை சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். தொடர்ந்து இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழையையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

இப்போது ஒரு பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும். பின்னர், கடுகு, சீரகம் தாளித்து, அதில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க தொடங்கவும்.

அவற்றுடன் தக்காளி, மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கி, முன்னர் வேக வைத்துள்ள பருப்பில் அப்படியே சேர்க்கவும்.

பிறகு அவற்றுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடங்களுக்கு கொதிக்கவிட்டு கீழே இறக்கவும்.

இறுதியாக, எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழையை மழைச் சாரல் தூவி பரிமாறி ருசிக்கவும்.

இந்த சூப்பரான தக்காளி தால் தயார் செய்யும் போது, எண்ணெயைக் குறைத்து ஒரு ஸ்பூன் நெய் சேர்த்தால், ருசியும் மணமும் அப்படி இருக்கும்.


Pasiparuppu semiya payasam:

 தேவையான பொருட்கள்:

சேமியா – ஒரு கப், வெல்லம் – முக்கால் கப், சிறு பருப்பு – கால் கப், உப்பு – ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள் – அரை ஸ்பூன், நெய் – 2 ஸ்பூன், முந்திரி – 10, திராட்சை – 5.
செய்முறை:
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும், தண்ணீர் சற்று சூடானதும் அதில் ஒரு கப் சேமியாவை சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். ஐந்து நிமிடத்தில் சேமியா நன்றாக வெந்து விடும். பின்னர் தண்ணீரை வடிகட்டி சேமியாவை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பாசிப்பருப்பை சுத்தம் செய்து, அதனுடன் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.
பிறகு அதே கடாயில் முக்கால் கப் வெல்லத்தை சேர்த்து, அதனுடன் கால் கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து, வடிகட்டி வெல்லக் கரைசலையும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு மீண்டும் ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் வைத்து, அதில் ஊற வைத்த பாசிப்பருப்பை சேர்த்து, 5 லிருந்து 10 நிமிடம் நன்றாக வேக வைக்க வேண்டும்.
பாசிப்பருப்பு நன்றாக வெந்ததும் அதில் தனியாக எடுத்து வைத்துள்ள சேமியாவை சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு இவற்றுடன் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் அரை ஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்க்க வேண்டும். பிறகு இவற்றுடன் வெல்லக் கரைசலையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, அடுப்பிலிருந்து இறக்கி வைக்க வேண்டும்.
பிறகு தாளிப்பு கரண்டியை அடுப்பின் மீது வைத்து, 2 ஸ்பூன் நெய் ஊற்றி, அதில் முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த கலவையை செய்து வைத்துள்ள சேமியா ஸ்வீட்டுடன் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான இனிப்பு பலகாரம் தயாராகிவிட்டது. இதன் சுவை அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும்.

ரவையை வைத்து உப்புமா மட்டுமில்லை இப்படியொரு சூப்பரான டிபனும் பண்ணலாம் தெரியுமா?

 தேவையான பொருட்கள்;

ரவை, கோதுமை மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, சீரகம், பெருங்காயத்தூள், கேரட், கறிவேப்பிலை, கொத்தமல்லி

செய்முறை:

1. முதலில் ரவையுடன் அதே அளவு கோதுமை மாவை சேர்க்க வேண்டும்.

2. இப்போது அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம், பெருங்காயத்தூள் சேர்க்க வேண்டும்.

3. அடுத்தது, உப்பு, துருவிய கேரட், மஞ்சள், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து கொண்ட வேண்டும்.

4. பின்பு இந்த கலவையை தண்ணீர் சேர்த்து அடை மாவு பக்குவத்துக்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

5. இப்போது அடையையை தட்டி தவாவில் போட்டு எண்ணெய் ஊற்றி சுட்டு எடுத்தால் சூப்பரான ரவை அடை தயார்.

இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் கேரட்டுடன் கூடுதலாக மற்ற காய்கறிகளையும் துருவி சேர்த்து சுட்டு எடுத்தால் ஆரோக்கியமான காலை உணவாக இது கட்டாயம் இருக்கும்.


Important samayal tips:

 1. வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு இவைகளை சமைக்கும்போது இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு தாளித்தால், மிகுந்த மணத்துடன் இருக்கும்.

2. சர்க்கரை பொங்கலின் சுவை மே


லும் பிரமாதமாக இருக்க கொஞ்சம் மில்க்மெய்ட் சேர்த்தால் அற்புதமான சுவையை சுவைக்கலாம்.
3. இட்லி கெட்டியாக இருந்தால் நாலு பச்சை அப்பளங்களை தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் ஒரு நிமிடம் ஓட விட்டு மாவில் கலந்து வார்த்துப்பாருங்கள். இட்லி பூ மாதிரி இருக்கும்.
4. உருளைக்கிழங்கு பொரிக்கும் முன்பு சிறிதளவு பயத்தம் மாவை தூவுங்கள். பொரியல் மொறு மொறுப்பாக, சுவை அசத்தலாக இருக்கும்.
5. முந்திரி பருப்பை எறும்பு அழிக்காமல் இருக்க சிறிதளவு பச்சை கற்பூரத்தை போட்டு வைக்கலாம்.
6. அரிசி களைந்த இரண்டாவது கழு நீரை சமயலுக்குப் பயன் படுத்தலாம். இதில் வைட்டமின் b6 மற்றும் b12 இருக்கிறது. இந்த நீரில் புளி ஊற வைக்கலாம், காய்கறி வேக விடலாம்.
7. மிளகாய் வத்தலை வறுக்கும் முன்பு, அதனுடன் அரை தேக்கரண்டி சாதரண உப்பைச் சேர்த்தால் மூக்கைத் துளைக்கும் நெடி வராது.

8. துவரம்பருப்பை வேக வைக்கும்போது, பருப்புடன் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் கலந்து வேக வைத்தால், சாம்பார் இரவு வரை ஊசிப்போகாமல் இருப்பதுடன் உடம்புக்கும் நல்லது, குளிர்ச்சியும் கூட.
9. குலோப்ஜாமூனை ஆறிய பாகில் போட்டு ஊற வைத்தால் உடையவே உடையாது, விரிசலும் ஏற்படாது.
10. பொதுவாக எந்த ஊறுகாய்க்கும் கடுகு எண்ணெய் ஊற்றி விட்டால் விரைவில் கெட்டுப்போவதை தவிர்க்கலாம்.
11. தர்பூஸ் தோலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகு தூள் அல்லது மிளகாய் தூள், உப்பு தூவி எண்ணெய் விட்டு வதக்கவும். வெள்ளரிக்காய் பொரியல் போன்று சுவையுடனும், வித்தியாசமான மணத்துடணுமிருக்கும்.
12. கடலை மாவுக்குப் பதிலாக ஒரு பங்கு பச்சரிசியும், ஒரு பங்கு பச்சை பருப்பும் கலந்து மிக்ஸியில் சன்னமாக அரைத்து உப்பு காரம் போட்டு பஜ்ஜி செய்யலாம்.

13. மணத்தக்காளி வத்தல் குழம்பை இறக்கியவுடன் அதில் சுட்ட அப்பளத்தை நொறுக்கிப் போட்டால் ருசியே ருசிதான்.
14. வாழைப்பூவைப் பொடிப்பொடியாக நறுக்கி அத்துடன் முருங்கை கீரையையும் சேர்த்து வதக்கி அடிக்கடி சாப்பிட்டால் குடற்புண் குணமாகும்.
15. எலுமிச்சை சாதம் கலக்கும் போது ஒரு ஸ்பூன் வதக்கிய வெங்காய துருவலை சேர்த்தால் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்.
16. பிரியாணி மற்றும் கலவை சாதங்களுக்கு அவசராமக பச்சடி செய்ய ஒரு பிடி மிக்ஸரை தயிரில் போட்டு கலக்கி துருவிய கேரட் சேர்த்து பறிமாறலாம்.
17. பனீரை ஃபிரிஜில் வைத்தால், மஞ்சள் நிறமாகிவிடும். ஒரு வெள்ளைத்துணியில் வினிகர் கலந்த நீரை தெளித்து அதில் பனீரை வைத்து ஃபிரிஜில் வைத்தால் நிறம் மாறாது.

18. "கொள்ளு"வை வேக வைத்து வடித்த தண்ணீரைக் குடித்து வந்தால் சக்தியான உடம்பும் ஒல்லியான உடம்பும் உங்களுக்கே.
19. பாதாம் பருப்பிற்கு பதில் வெள்ளரி விதைகளைப் பாலில் கலந்து சாப்பிட்டால் உடல் எடை கூடாது. ஆனால் உடல் வலிமை பெறும்.
20. வேப்பம்பூவை நெய்யில் வறுத்து சிறிது உப்பு சேர்த்து சூடான சாதத்தில் பிசைந்து மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் நுழைவுத்தேர்வு, தேர்வு ஜுரம், கல்லூரி சேர்க்கை ஜுரம், நாளை பள்ளி திறக்கிறதே என்ற ஜுரம் எல்லாம் பறந்து போகும்.

Poha(aval) idly


 INGREDIENTS:

  • 1 cup poha / aval / avalakki / atukulu / flattened rice (thick)
  • 1 cup curd
  •  cup rice rava / idli rava
  • ¾ tsp salt
  • 2 cup water (as required)
  • ¾ tsp eno / fruit salt
  • INSTRUCTIONS:
     

    • firstly, in a small mixi grind 1 cup poha to a coarse powder. i have used thick variety poha, if you are using thin then increase the quantity of poha.
    • add 1 cup curd and mix well. make sure to poha absorbs curd.
    • further, add 1½ cup rice rava and mix well. you can alternatively, use upma rava and mix well.
    • now add ¾ tsp salt and 1 cup water.
    • mix well making sure everything is well combined adding water as required.
    • cover and rest for 30 minutes or until the rava and poha absorb water.
    • after 30 minutes, mix gently, making sure the rava has absorbed water.
    • now add ½ cup water and mix well adjusting the consistency.
    • just before steaming, add ¾ tsp eno and mix gently until the batter turns frothy.
    • now pour the batter into greased idli plate.
    • steam the idli for 15 minutes or until the idli is cooked well.
    • finally, enjoy poha idli with coriander mint chutney.

சுகர் பிரச்னைக்கு ஓமம்:

 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஓமம் சிறந்தது



உணவுக்குப் பிறகு ஓமம் தேநீர் குடிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் உங்களுக்கு ஒரு டீஸ்பூன் ஓமம், ஒரு டீஸ்பூன் பெருஞ்சீரகம் விதைகள் மற்றும் நான்கில் ஒரு பங்கு இலவங்கப்பட்டை தூள் தேவை. இந்த பொருட்கள் அனைத்தையும் வெதுவெதுப்பான நீரில் சேர்த்து தேநீர் காய்ச்சவும். நீங்கள் சாப்பிட்ட 45 நிமிடங்களுக்குப் பிறகு இதை உட்கொள்ளுங்கள். இது இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைவதாகக் கூறப்படுகிறது,”

அஜீரண பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும்

அசிடிட்டி, வாயு மற்றும் வீக்கம் மட்டுமல்ல, ஓம விதைகள் வயிற்று வலியைப் போக்க உதவும். ஓம விதைகளை மென்று சாப்பிடுவது அமிலத்தன்மையை குறைக்க உதவும்.

செரிமானத்தை மேம்படுத்தும்

ஓம விதைகளை தண்ணீரில் கொதிக்க வைப்பது நமது உணவை உடைக்க அதிக செரிமான நொதிகள் மற்றும் வயிற்று அமிலங்களை சுரக்க உதவும். இதற்கு ஒரு டீஸ்பூன் ஓம விதைகளை கொதிக்கும் நீரில் சேர்ந்து அந்த நீரை குடிப்பதுசெரிமானத்திற்கு மிகவும் நல்லது. இது உங்கள் வயிற்று அமிலங்கள் மற்றும் செரிமான அமைப்பை தளர்த்தி, உங்கள் குடல் சுவர்களுக்கு மிகவும் ஆரோக்கியத்தை அளிக்க உதவுகிறது.

குழந்தைகளுக்கு நன்மை பயக்கும்

உங்கள் பிள்ளைக்கு அடிவயிற்றில் கடுமையான வலி அல்லது குடல் அடைப்பு காரணங்களால் அவதிப்பட்டால் நீங்கள் ஓமம் தண்ணீர் அல்லது சில ஓம விதைகளை மெல்ல கொடுக்கலாம். இது உடனடி தீர்வை கொடுக்கும்.

குடற்புழு நீக்கத்தில் உதவும்

ஓமத்தை (1 டீஸ்பூன்) சிறிது வெல்லத்துடன் (1 டீஸ்பூன்) கலக்கவும். இந்த கலவையானது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை குடற்புழு நீக்கத்திற்கான ஒரு பொதுவான தீர்வாகும். வெல்லம் புழுவை வெளியே வர ஈர்க்கிறது மற்றும் ஓமம் வயிற்று அமிலத்துடன் கலந்து புழுக்களை அழிக்க உதவுகிறது.

ஆஸ்துமா உள்ளவர்களுக்கு உதவும்

ஓமம் டீயுடன் தேன் சேர்த்து பருகினால் ஆஸ்துமா அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெறலாம். இது இருமல் மற்றும் நெரிசலைக் குறைக்க உதவும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

ஓமத்தில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.