தேவையான பொருட்கள்;
ரவை, கோதுமை மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, சீரகம், பெருங்காயத்தூள், கேரட், கறிவேப்பிலை, கொத்தமல்லி
செய்முறை:
1. முதலில் ரவையுடன் அதே அளவு கோதுமை மாவை சேர்க்க வேண்டும்.
2. இப்போது அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம், பெருங்காயத்தூள் சேர்க்க வேண்டும்.
3. அடுத்தது, உப்பு, துருவிய கேரட், மஞ்சள், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து கொண்ட வேண்டும்.
4. பின்பு இந்த கலவையை தண்ணீர் சேர்த்து அடை மாவு பக்குவத்துக்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
5. இப்போது அடையையை தட்டி தவாவில் போட்டு எண்ணெய் ஊற்றி சுட்டு எடுத்தால் சூப்பரான ரவை அடை தயார்.
இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் கேரட்டுடன் கூடுதலாக மற்ற காய்கறிகளையும் துருவி சேர்த்து சுட்டு எடுத்தால் ஆரோக்கியமான காலை உணவாக இது கட்டாயம் இருக்கும்.
No comments:
Post a Comment
Thank you for reading our articles follow my blog