async='async' nonce='t6bwn6hUjD3gY64Df1e_cQ' src='https://fundingchoicesmessages.google.com/i/pub-6607909196454087?ers=1'/> ca-app-pub-5474065999861838~2351779441 ca-app-pub-5474065999861838/5543358688 fapytamilnetwork.blogspot.com: 2025

இருமல் மற்றும் தொண்டை கமறல் எல்லாம் சரியாக இதை செய்யுங்கள்


குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் அடிக்கடி வரும் இடைவிடாத இருமல், தொண்டை வலி, குளிர் போன்ற பிரச்சனைகளுக்கு இது ஒரு அற்புதமான நாட்டு மருந்து! 


தேவையான பொருட்கள்:


- வெற்றிலை – 2 இலை 

- இஞ்சி – 1 அங்குல அளவு 

- சுக்கு – ½ டீஸ்பூன்

- மிளகு – 5 கற்கள்

- தண்ணீர் – 1 கப் (150 ml)


தயாரிக்கும் முறை:

1️⃣ வெற்றிலை, இஞ்சி, சுக்கு, மிளகு ஆகியவற்றை ஒன்றாக நன்றாக அரைக்கவும்.

2️⃣ அதை ஒரு கப் தண்ணீரில் சேர்த்து கொதிக்கவைக்கவும்.

3️⃣ 5–7 நிமிடங்கள் கொதித்து வந்தவுடன் வடிகட்டி வைக்கவும்.


பயன்படுத்தும் முறை:


- பெரியவர்கள்: காலை, மாலை தலா 2 டேபிள் ஸ்பூன் (30 ml) அளவு குடிக்கவும்.

- குழந்தைகள் (5 வயதுக்கு மேல்): காலை, மாலை தலா 1 டீஸ்பூன் (5 ml) அளவு குடிக்கவும்.


இது:

இருமல், குளிர், தொண்டை வலியை விரைவாகக் குறைக்கும்.

உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

100% இயற்கையானது, பக்க விளைவுகள் எதுவும் இல்லை.


சனி, குளிர், இருமல் தொல்லைகளுக்கு சிறந்த நாட்டு மருந்து — “வெற்றிலை ஜூஸ்!” 


#HealthTips #TamilHealth #NaturalRemedy #HomeCure #ViralTamilPost #ColdCoughRelief #TamilMedicine #Wellness

Benefits of coconut flower


 தைராய்டு வியாதிக்கு இனி மருந்து மாத்திரை தேவையில்லை.... இதை சாப்பிட்டாலே போதும்...

தேங்காய் பூ

தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சியே ஆகும். தேங்காய்பூவில், தேங்காய் மற்றும் இள நீரில் இருப்பதை இருப்பதை விட அதிக சத்துக்கள் இருக்கிறது.

இளநீரில் இருக்கும் சதைப் பற்றினைப் போல ருசி இருக்கும். அதன் நன்மைகளைப் பற்றி தெரிந்தால் தேங்காய் பூவை தேடி கண்டுபிடித்து சாப்பிடத் தோன்றும்.

** நோய் எதிர்ப்பு சக்தி :

தேங்காய் பூவில் மிக அதிக ஊட்டச் சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி இருமடங்கு அதிகரிக்கும். பருவ கால தொற்று நோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை தேங்காய் பூ கொடுக்கும்

** சக்தி தரும் :

மன அழுத்தம் அல்லது வேலைப்பளு அதிகம் இருப்பவர்கள் தேங்காய் பூவை சாப்பிட்டால் முழு எனர்ஜி கிடைப்பதோடு நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும் அளவிற்கு மேஜிக் தேங்காய் பூவில் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? ரை பண்ணிப் பாருங்களேன்.

** ஜீரண சக்திக்கு :

உங்களுக்கு ஜீரண சக்தி குறைவாக இருந்தால் தேங்காய் பூ சிறந்த சாய்ஸ் ஆக இருக்கும். இதிலுள்ள மினரல், விட்டமின் உங்கள் குடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. மலச்சிக்க்லை குனமாக்குகிறது

** சர்க்கரை வியாதிக்கு :

தேங்காய் பூ இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. . இதனால் ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை கட்டுபடுத்த இயலும்.

** இதயம் :

இதயத்தில் படியும் கொழுப்பை கரையச் செய்கிறது. ரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பை கரைக்கிறது. இதய நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்கும்.

** தைராய்டு :

நீங்கள் தைராய்டு பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருந்தால் தேங்காய் பூவை சாப்பிடுங்கள். இது தைராய்டு சுரப்பை ஒழுங்குபடுத்துகிறது. தைராய்டு பாதிப்பை குணப்படுத்துகிறது.

** புற்று நோய் :

ஃப்ரீ ரேடிகல்ஸை வெளியேற்றுகிறது. செல்களை பாதுகாக்கிறது. புற்று நோய் வராமல் காக்கிறது.

** உடல் எடை :

உடல் எடையை கட்டுக் கோப்பாக வைத்திருக்க உதவுகிறது. இதில் குறைந்த அளவு கலோரி இருப்பதால் உடல் எடை குறைய உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதால் கொழுப்பு சேராமால் வேகமாக உட்ல எடை குறையும்.

** சிறு நீரகம் :

சிறு நீரக பாதிப்பை குறைக்கிறது. சிறு நீரக தொற்று நோய்களை குணப்படுத்தும். நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியமான சிரு நீரகத்தை பெறலாம்.

** முதுமை :

தேங்காய் பூவில் முக்கியமான முதுமையை தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளது. சுருக்கங்கள், வய்தான தோற்றம், சரும தொய்வு போன்றவை நம்மை நெருங்க விடாது. சூரியனால் உண்டாகும் சரும பாதிப்புகளை தடுக்கிறது.

சளி மற்றும் இருமல் சிறந்த மருந்து


 

நெஞ்சு சளியை இளக்கி வெளியேற்ற இதுதான் பெஸ்ட்; சுக்கை விட 10 மடங்கு பவர் ஃபுல்: டாக்டர் ஜெய கல்பனா

நெஞ்சு சளியால் கடுமையாக அவதிப்படுபவர்களுக்கு சிற்றரத்தை எந்த அளவிற்கு பயன் தருகிறது என்றும், இதனை எப்படி மருந்தாக எடுத்துக் கொள்வது என்றும் மருத்துவர் ஜெய கல்பனா விளக்கம் அளித்துள்ளார்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது பேதமின்றி பெரும்பாலானோர் சளி மற்றும் இருமல் தொல்லையால அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் மருந்து தயாரிப்பது எப்படி என மருத்துவர் ஜெய கல்பனா குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சூழலில் சுக்கு குறித்து பொதுமக்கள் அறிந்து வைத்திருக்கின்றனர். ஆனால், சிற்றரத்தை குறித்து பெரும்பாலானோருக்கு தெரியவில்லை என மருத்துவர் ஜெய கல்பனா தெரிவித்துள்ளார். ஆனால், கொரோனா காலத்தில் நாம் அதிகமாக பயன்படுத்திய பொருள் சிற்றரத்தை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுக்கை விட 10 மடங்கு சிற்றரத்தை வீரியமாக வேலை பார்க்கும் என மருத்துவர் ஜெய கல்பனா கூறுகிறார். நெஞ்சு பகுதியில் இருக்கும் சளியை முற்றிலும் இளக்கி வெளியேற்ற சிற்றரத்தை பெரிதும் உதவி செய்வதாக அவர் கூறுகிறார். இந்த விஷயத்தில் சிற்றரத்தையை விட வேறு ஒரு சிறந்த  மருந்து இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

தேங்காய் துருவல், பனங்கற்கண்டு ஆகிய இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து சுடுபடுத்த வேண்டும். இவ்வாறு செய்தால் பனங்கற்கண்டு லேசாக இளகி விடும். இப்போது, இரண்டு அல்லது மூன்று சிட்டிகை சிற்றரத்தை பொடி, இரண்டு துளிகள் நெய் சேர்க்க வேண்டும். 

இந்த மருந்தை சூடாக தயாரித்து நெஞ்சு சளி, இருமலால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இரவு உறங்கச் செல்வதற்கு முன்பாக கொடுக்க வேண்டும். இந்த மருந்து சளியை பெரிதும் கட்டுப்படுத்த உதவுவதாக மருத்துவர் ஜெய கல்பனா அறிவுறுத்துகிறார். எனவே, அதிகப்படியான சளியால் அவதிப்படுபவர்கள் இந்த மருந்தை எடுத்துக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.