உருளைக்கிழங்கு புட்டு:
தேவையான பொருள் :
உருளைக்கிழங்கு -1/4 கிலோ
உப்பு -தேவையான அளவு
தேங்காய்-1/2 மூடி
தாளிக்க:
கடுகு-1ஸ்பூன்
உளுந்து-1ஸ்பூன்
கருவேப்பிலை ஒரு கொத்து
சீரகம்-1ஸ்பூன்
பச்சைமிளகாய்-2
சின்ன வெங்காயம் -10
நல்லெண்ணெய் தேவையான அளவு
செய்முறை :
முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்துக் கொள்ளவும்.
தேங்காயை துருவி வைக்கவும் .
சின்ன வெங்காயம்,பச்சைமிளகாயை
பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தோலுரித்து வைத்துள்ள உருளைக்கிழங்குடன் உப்பு சேர்த்து மசித்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உளுந்து,சீரகம் சேர்ந்து கருவேப்பிலை சின்ன வெங்காயம் பச்சைமிளகாய் சேர்ந்து நன்றாக வதக்கவும்.
அடுத்து உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு ஒரு சேர கிளரவும்.
2நிமிடம் கழித்து தேங்காய் துருவலை போட்டு கிளரவும்.பின் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
சுவையான உருளைக்கிழங்கு புட்டு தயார்.
இது சாம்பார் சாதம் ,ரசம் சாதத்துடன் சேர்ந்து பரிமாறலாம்.
No comments:
Post a Comment
Thank you for reading our articles follow my blog