தேவையான பொருள்கள்:
பச்சரிசி – 1 கிலோ
தேங்காய் – ½ லிட்டர்
பொரி கடலை – ½ கிலோ
தேங்காய் எண்ணெய் – ½ லிட்டர்
எள் அல்லது சீரகம் – 1 மேஜைக் கரண்டி
நெய் – 50 கிராம்
உப்பு – தேவையானது
செய்முறை:
அரிசியை நனைய வைத்து உரலில் மாவாக்கி (வெறும் சட்டியில்) ஈரப்பசை போகும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பொரி கடலையை உரலில் இடித்து மாவாக்கிக் கலந்து கொள்ளவும்.
உப்புத் தண்ணீர் தெளித்து, எள் போட்டு, நெய்யைக் காய வைத்து மாவில் ஊற்றி கட்டியாகப் பிசைந்து, முறுக்குக் குழலில் நட்சத்திர அச்சைப்போட்டு மாவை அதனுள் வைத்து காயவைத்த எண்ணெயில் முறுக்குப் பிழிந்து எடுக்கவும்
No comments:
Post a Comment
Thank you for reading our articles follow my blog