தேவையான பொருட்கள்:
பூண்டு, தக்காளி, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு, கடுகு.
செய்முறை:
1. முதலில் கடாயில் எண்ணெய் ஊறி அதில் காரத்திற்கு தேவையான அளவு காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. பின்பு, அதே கடாயில் 1 கப் அளவு பூண்டு சேர்த்து நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும்.
3. இப்போது அதனுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
4. அடுத்தது, மிக்ஸியில் வறுத்த காய்ந்த மிளகாய், வதக்கி எடுத்த பூண்டு , தக்காளி சேர்த்து அரைக்க வேண்டும்.
5. இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த சட்னியை அதில் கொட்ட வேண்டும்.
6. பச்சை வாசனை போகும் வரை எண்ணெய்யில் சட்னியை வதக்க வேண்டும்.
7. எண்ணெய் தனியாக பிரிந்து வந்த உடனே இறக்கினால் போதும், சுவையான அட்டகாசமான பூண்டு சட்னி தயார்.
No comments:
Post a Comment
Thank you for reading our articles follow my blog